சான்று கூறும் விண்ணப்பங்களை 15 நாட்களுக்குள் முடிக்க அறிவுறுத்தல் !

சான்று கூறும் விண்ணப்பங்களை 15 நாட்களுக்குள் முடிக்க அறிவுறுத்தல் !

விண்ணப்பம்

பட்டா மாறுதல் உள்ளிட்ட அனைத்து வகை சான்று கோரும் விண்ணப்பங்களையும் 15 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநர் பி. மதுசூதன் ரெட்டி அறிவுறுத்தினார்.

பட்டா மாறுதல் உள்ளிட்ட அனைத்து வகை சான்று கோரும் விண்ணப்பங்களையும் 15 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநர் பி. மதுசூதன் ரெட்டி அறிவுறுத்தினார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் தலைமை நில அளவையர்கள் பங்கேற்ற கூட்டத்தில் அவர் பேசியது: பட்டா மாறுதல் உள்ளிட்ட அனைக்க வகையான சான்று கோரும் விண்ணப்பங்களையும் 15நாட்களுக்குள் தீர்வுகாண வேண்டு 7 முதல் 10 நாட்களுக்குள் முடிக்கக் கூடிய சான்றுகளை காலதாமதமின்றி முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்திலும், வாகவாசல், தட்டாம்பட்டி வருவாய் கிராமம் மற்றும் முள்ளூர் ஊராட்சி, தென்னதிரையான்பட்டி கிராமத்தில் பயிர் சாகுபடி செய்துள்ளதை, எண்ம பயிர் கணக்கெடுப்பு முறையையும் அவர் ஆய்வு செய்தார். இந்நிகழ்வுகளில் மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா, மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ஆர். ரம்யாதேவி, ஆட்சியரின் நேர்முகஉதவியாளர் (பொது) முருகேசன், கோட்டாட்சியர்கள் பா. ஐஸ்வர்யா (புதுக்கோட்டை), ச. சிவக்குமார் (அறந்தாங்கி), தெய்வநாயகி (இலுப்பூர்), மண்டல துணை இயக்குநர் (நில அளவை) பி. சசிக்குமார், உதவி இயக்குநர் (நில அளவை) ஆ. அப்துல் ஜாகிர் உசேன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags

Next Story