ஓட்டுனர்களுக்கு காப்பீடு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி

வெள்ளியணையில் ஓட்டுனர்களுக்கு காப்பீடு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கரூர் மாவட்டம், வெள்ளியணை மாரியம்மன் கோவில் வளாகத்தில், செவன் ஸ்டார் அனைத்து வாகன ஓட்டுனர்கள் வாழ்வுரிமை நல சங்கத்தின் சார்பில் காப்பீடு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சங்கத்தின் மாநில தலைவர் பொன். சரவணன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநில பொது செயலாளர் முன்னிலை விகித்து, சங்கத்தின் வளர்ச்சி குறித்தும், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை பற்றியும், ஓட்டுனர்கள் பாதுகாப்பாக வாகனங்களை ஓட்டுவது குறித்தும் ஆலோசனைகள் வழங்கினார். பின்னர் முதற்கட்டமாக 39 மாவட்டங்களைச் சேர்ந்த 115 ஓட்டுநர்களுக்கு, சங்கத்தின் சார்பில் காப்பீடு செய்த்தற்க்கான காப்பீடு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கண்ணதாசன், மாநில பொதுச் செயலாளர் முத்துகிருஷ்ணன், தலைமை ஆலோசகர் தங்கராஜ் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

Tags

Next Story