கடலூரில் மழைநீரை அகற்றும் பணி தீவிரம்

X
மேயர் ஆய்வு
கடலூர் மாநகராட்சி பகுதிகளில் தொடர் மழையால் தேங்கிய மழை நீரை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கடலூர் மாநகராட்சியில் உள்ள மஞ்சக்குப்பம் பகுதியில் நேற்று இரவு முதல் முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மோட்டார் மூலம் மழைநீரை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளனர்.
Next Story