மாஞ்சோலையில் சாலை சீரமைப்பு பணி தீவிரம்

மாஞ்சோலையில் சாலை சீரமைப்பு பணி தீவிரம்

சாலை சீரமைப்பு பணி

மழையால் சேதமடைந்த மாஞ்சோலை பகுதி சாலைகளை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
நெல்லை மாவட்டம் மாஞ்சோலை பகுதியில் பெய்த கன மழையின் காரணமாக பல இடங்களில் சாலை மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இதன் காரணமாக கல்லிடைகுறிச்சியில் இருந்து மாஞ்சோலைக்கு செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. குறிப்பாக பேருந்து வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்ட நிலையில் இன்று காலை முதல் மாஞ்சோலை பகுதியில் சாலை சீரமைப்பு பணி வேகமாக நடைபெற்று வருகின்றது.

Tags

Next Story