கிரிவளப்பாதையில் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரம்

கிரிவளப்பாதையில் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரம்
தொட்டியில் தண்ணீர் நிரப்பல் 
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் வனவிலங்குகளுக்கு தொட்டியில் தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்றது.

கோடை வெயில் சுட்டெரிப்பதால் வனப்பகுதியில் உள்ள குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள வனப்பகுதியில் வனவிலங்குகளின் தாகம் தணிக்க தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது .

வனத்துறையினர் தண்ணீர் தொட்டிகளில் டிராக்டர் மூலம் தண்ணீர் நிரப்பினர். கோடைக்காலம் முடியும் வரை வனவிலங்குகளின் தாகம் தீர்க்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story