மாவட்ட மருத்துவமனை கட்டும் பணி தீவிரம்

மாவட்ட மருத்துவமனை கட்டும் பணி தீவிரம்
குரோம்பேட்டையில் மாவட்ட மருத்துவமனை கட்டும் பணி தீவிரமாக நடக்கிறது. 
குரோம்பேட்டையில் மாவட்ட மருத்துவமனை கட்டும் பணி தீவிரமாக நடக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டையில், ஜி. எஸ். டி. , சாலையை ஒட்டி, அரசு தாலுகா மருத்துவமனை இயங்கி வருகிறது. தென்சென்னையில் உள்ள ஒரே அரசு மருத்துவமனை இதுவாகும். இதைவிட்டால், செங்கல்பட்டு அல்லது சென்னைக்கு தான் செல்ல வேண்டும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து, செங்கல்பட்டு மாவட்டம் பிரிக்கப்பட்ட போது, குரோம்பேட்டை தாலுகா மருத்துவமனையை, மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. மாவட்ட மருத்துவமனையாக மாற்றினால், இதை சுற்றியுள்ள பல்லாவரம், தாம்பரம், சோழிங்கநல்லுார், ஆலந்துார், ஸ்ரீபெரும்புதுார் தாலுகாக்களை சேர்ந்த மக்கள் பயனடைவர் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

இதையடுத்து, குரோம்பேட்டை மருத்துவமனையை, மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனரகம், 2021 அக்டோபரில் அனுமதி வழங்கியது. தொடர்ந்து, இம்மருத்துவமனையை நவீனமயமாக்க, 110 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டது. இதற்காக, தாம்பரம் சானடோரியத்தில், சுகாதாரத் துறைக்கு சொந்தமான இடத்தில், 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. கடந்த 2023 பிப்ரவரி 28ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சுற்றுச்சூழல் மற்றும் தொல்லியல் துறையின் தடையில்லா சான்று கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால், 2023 ஆகஸ்ட் மாதம் பணிகள் துவங்கின. பணிகள் துவங்கி, ஐந்து மாதங்கள் ஆன நிலையில், தற்போது, 30 சதவீத பணிகள் முடிந்துள்ளன.

Tags

Next Story