சாலை விரிவாக்க பணிக்காக மரங்கள் வெட்டும் பணி தீவிரம்

சாலை விரிவாக்க பணிக்காக மரங்கள் வெட்டும் பணி தீவிரம்

சாலை விரிவாக்க பணிக்காக மரங்கள் வெட்டும் பணி தீவிரம்

நல்லம்பள்ளி பகுதியில் சாலை விரிவாக்க பணிக்காக புளிய மரங்களை வெட்டி அகற்றும் பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம் நல்லம்பள்ளி நகர பேருந்து நிலைய பகுதியில் இருந்து லளிகத்தில் செல்லும் பிரதான சாலையில் இரண்டு புறம் முழுவதும் புளிய மரங்கள் அடர்ந்து ரம்மியமாக காட்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது தற்போது நல்லம்பள்ளி பேருந்து நிறுத்தம் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்காக பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் சூழலில் சாலை விரிவாக்க பணிக்காக நெடுஞ்சாலை துறை சார்பில் புளிய மரங்களை வெட்டி அகற்றும் பணி இன்று காலை முதல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ரம்மியமாக காட்சியளிக்கும் பல ஆண்டுகளாக உள்ள புளியமரம் அகற்றும் பணி நடைபெறுவதால் பொதுமக்கள் சற்று அதிருப்தியில் உள்ளனர்.

Tags

Next Story