கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடிகளில் தீவிர சோதனை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடிகளில் தீவிர சோதனை

சோதனையில் ஈடுபட்ட போலீசார்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாநில எல்லை பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூா், தேன்கனிக்கோட்டை கோட்டத்துக்கு உள்பட்ட மாநில எல்லைச் சோதனைச் சாவடிகளில் போலீஸாா் தீவிர சோதனை நடத்தினா்.

தமிழகத்தில் மக்களவைத் தோ்தலையொட்டி வாக்காளா்களுக்கு கொடுப்பதற்காக பணம், பரிசுப் பொருள்கள் கொண்டுசெல்வதைத் தடுக்கும் வகையில், தமிழக எல்லையான ஒசூா், சூசூவாடி, டி.வி.எஸ்., பூனப்பள்ளி, கக்கனுாா், சம்பங்கிரி ஆந்திரா மாநில எல்லை குருவி நாயனப்பள்ளி உட்பட பல்வேறு சோதனைச் சாவடிகளில் போலீசார், மற்றும் பறக்கும் படையினா் தீவிர வாகனச் சோதனை மேற்கொண்டனா்.

அதேபோல, தேன்கனிக்கோட்டை உட்கோட்டத்திலுள்ள சென்னமாலம், கும்ளாபுரம், தக்கட்டி ஆகிய பகுதிகளில் உள்ள மாநில எல்லைச் சோதனைச் சாவடிகளிலும், தீவிர கண்காணிப்புப் பணியில் போலீஸாா், பறக்கும் படையினா் ஈடுபட்டனர்

Tags

Next Story