காட்பாடி ரயில் நிலையத்தில் தீவிர சோதனை

காட்பாடி ரயில் நிலையத்தில் தீவிர சோதனை

தீவிர சோதனையில் போலீசார்


கேரள மாநில குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து காட்பாடி ரயில் நிலையத்தில் தீவிர சோதனை

ை கேரள மாநிலம் கொச்சி நகர மையத்தில் நடந்த கிறிஸ்தவ ஜெபக்கூட்டத்தில் டிபன்பாக்ஸ் குண்டுகள் வெடித்ததில் பெண் ஒருவர் பலியானார். 35 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து மத்திய உளவுத்துறை, என்ஐஏ போன்ற அமைப்புகள் நாடு முழுவதும் உஷார் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளன.

அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன இதனை அடுத்து வேலூர் மாவட்டம் காட்பாடி இரயில் நிலையத்தில் இரயில்வே பாதுகாப்புப்படையினர், ரயில்வே போலீசார், இணைந்து கடும் சோதனையை மேற்கொண்டனர். முக்கிய வழிபாட்டுத்தலங்களிலும், மக்கள் கூடும் இடங்களிலும் கண்காணிப்பு பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story