தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோயிலில் தீவிர சோதனை

தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோயிலில் தீவிர சோதனை
 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் வெடிகுண்டு சோதனையில் குழுவினர் ஈடுபட்டனர்.

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் வெடிகுண்டு சோதனையில் குழுவினர் ஈடுபட்டனர்.

தென்காசியில் வரலாற்று சிறப்புமிக்க காசி விஸ்வநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தென்காசி தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டு சோதனையில் குழுவினர் ஈடுபட்டு வந்தனர்.

இதில் இன்று 8-ம் தேதி காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே கோவிலுக்குள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் முழுவதும் சோதனை செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story