நெல்லையில் தீவிர மோப்பநாய் சோதனை

நெல்லையில் தீவிர மோப்பநாய் சோதனை

சோதனையில் ஈடுபட்டுள்ள போலீசார்


கேரளா மாநிலம் கொச்சி மாவட்டம் களமசேரி பகுதியில் ஜெப கூட்டம் நடந்த திருமண மண்டபத்தில் இன்று காலை வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில் ஒரு நபர் உயிரிழந்தார். 51பேர் மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் காவல்துறை ஆணையாளர் மகேஸ்வரி உத்தரவின் பெயரில் மோப்பநாய் உதவியோடு நெல்லை சந்திப்பு மற்றும் பாளையங்கோட்டை புதிய பேருந்து நிலையம் டவுன் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் உள்ள அனைத்து அறைகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

Tags

Next Story