மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு !

மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு !
 தீவிர வாக்கு சேகரிப்பு
காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளர் ஜி. செல்வம் அவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மெய்யூர், பிளாப்பூர், சிதண்டி, வடபாதி, மாமண்டூர், படாளம் புக்கத்துறை ஆகிய பகுதிகளில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளர் ஜி. செல்வம் அவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த வாக்கு சேகரிப்பின் போது காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க. சுந்தர் எம். எல்.ஏ, ஒன்றிய கழக செயலாளர் படாளம் சத்யசாய், உள்ளிட்ட ஒன்றிய நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ பேசுகையில் ,தமிழகத்தில் திமுக கூட்டணி நாடாளுமன்ற வேட்பாளர்கள் 40 பேரும் வெற்றி பெற்று கை காட்டுவார்கள் தான் இந்தியாவின் பிரதமராக வர முடியும் என்பதை உணர்ந்த காரணத்தால் திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பை தடுக்கும் வகையில்தான் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வருகிறார் எனவும், தமிழ்நாட்டில் வெள்ளம்,புயல் என பேரிடர்கள் ஏற்பட்டபோது வராத பிரதமர் மோடி மக்களை ஏமாற்றுகிற வகையில் தேர்தலுக்காக மட்டுமே தமிழகத்திற்கு வந்து செல்கிறார். நரேந்திர மோடி அவர்கள் இந்திய நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டால் தான் இந்தியாவில் சமூகநீதி காக்கப்படும் எனவும், சிறுபான்மை மக்கள் பாதுகாக்கப்படுவார்கள் எனவும், நம்முடைய சுதந்திரம் நமக்கு கிடைக்கும் எனவும், நம்முடைய சுதந்திரம் நமக்கு தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்றால் இந்தியாவில் மிகப் பெரிய ஆட்சி மாற்றத்தை கொண்டு வர வேண்டும் அந்த மாற்றத்தை தருவதற்காக தான் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாபெரும் வலிமையான கூட்டணியை அமைத்து வெற்றுக் கூட்டணியாக செயல்பட்டு வருகிறது என புகழாரம் சூட்டினார்.

Tags

Next Story