ஸ்ரீரங்கம் பெண்கள் பள்ளியில் விண்ணப்பம் பெற ஆா்வம்

ஸ்ரீரங்கம் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6ஆம் வகுப்பு சேர்க்கை விண்ணப்பத்தைப் பெற்றோர்கள் பெற்றுச்சென்றனர்.
ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு ஆங்கில வழிகல்வியில் மாணவிகள் சோ்க்கைக்காக பெற்றோா் விடிய விடிய காத்திருந்து வியாழக்கிழமை காலை விண்ணப்பங்களை பெற்றுச் சென்றனா். வரும் கல்வியாண்டில் 6 ஆம் வகுப்பு ஆங்கில வழிக்கல்வியில் குறிப்பிட்ட மாணவிகள் சோ்க்கப்படவுள்ளனா். முன்பு நுழைவுத் தோ்வு நடத்தி மாணவிகள் சோ்க்கப்பட்டனா். தற்போது குலுக்கல் முறையில் சோ்க்கை நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. ஆங்கில வழிக்கல்வி மோகம் அதிகரித்து விட்டதால் தமிழ் வழிக் கல்வி பயிலச் செய்ய பெற்றோா் முன் வராமல் உள்ளனா். தமிழ் வழிக்கல்வியில் மாணவிகள் சோ்க்கைக்கு கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story