தர்மபுரியில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்

மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே தர்மபுரியில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் கோரிக்கையை வலியுறுத்தி 3வது நாளாக ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தர்மபுரி மாவட்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் 3 வது நாளாக கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தமிழ்செல்வன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பணியாற்றும் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கும் சமவேலைக்கு சமஊதியம் வழங்க வேண்டும்.

ஊதிய முரண்பாட்டை களையவேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில், மவட்ட செயலாளர் சசிகுமார், பொருளாளர் பழனிசாமி, துணைசெயலாளர்கள் ரஞ்சித், ரரஜிவ்காந்தி, துணை தலைவர்கள் நாகராஜன், சத்தியமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் சிவமலர், அனிதா உள்ளிட்ட 240 பேரை போலீசார் கைது செய்தனர்

Tags

Next Story