சர்வதேச எய்ட்ஸ் மெழுகுவர்த்தி ஒளியேற்றும் நிகழ்ச்சி

சர்வதேச எய்ட்ஸ் மெழுகுவர்த்தி ஒளியேற்றும் நிகழ்ச்சி

சர்வதேச எய்ட்ஸ் மெழுகுவர்த்தி ஒளியேற்றும் நிகழ்ச்சி

எய்ட்ஸ் தொற்றால் உயிரிழந்தோரை நினைவு கூரும் வகையில் சர்வதேச எய்ட்ஸ் மெழுகுவர்த்தி ஒளியேற்றும் நினைவு நாள் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட எச்ஐவியுடன் வாழ்வோர் கூட்டமைப்பின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு எச்ஐவியுடன் வாழ்வோர் கூட்டமைப்பின் தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் மேற்பார்வையாளர் ஜெயகுமார், மேலாளர் கோபால், பாவை அறக்கட்டளையின் சத்யபிரியா, மரம் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேரா. சா. விஸ்வநாதன், செயலர் பழனியப்பா கண்ணன் உள்ளிடடோரும் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஒளியேற்றினர். தொடர்ந்து, பள்ளிச் சிறார்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

Tags

Next Story