சர்வதேச போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

சர்வதேச போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி

தூத்துக்குடியில் சோரீஸ்புரம் அரசு மேல்நிலைப்பள்ளி பசுமைபடை சார்பில் சர்வதேச போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தூத்துக்குடியில் சோரீஸ்புரம் அரசு மேல்நிலைப்பள்ளி பசுமைபடை சார்பில் சர்வதேச போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆலோசனையின் பேரில் தமிழ்நாடு காவல்துறை, சிப்காட் காவல் நிலையம், தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு, தொழிலாளர் நலத்துறை, சோரீஸ்புரம் அரசு மேல்நிலைப்பள்ளி பசுமைபடை சார்பில் சர்வதேச போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் ஆர். மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்ற பேரணிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் க.மாணிக்கவாசகம், அ.பானு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் எம்.ஏ.தாமோதரன் வரவேற்றுப் பேசினார். தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையாளர் க.திருவள்ளுவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். ஒருங்கிணைந்த தொழிலாளர் நல அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்ட பேரணியானது வேலைவாய்ப்பு அலுவலகம், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, சோரீஸ்புரம் பிரதான சாலை வழியாக அரசு மேல்நிலைப் பள்ளியை சென்றடைந்தது.

Tags

Next Story