பள்ளியில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்

பள்ளியில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்

  தூத்துக்குடி ஹோலி கிராஸ் பள்ளியில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம் நடந்தது. 

தூத்துக்குடி ஹோலி கிராஸ் பள்ளியில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம் நடந்தது.
தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டது. விழாவை தலைமை ஆசிரியை செலின் தொடங்கி வைத்தார். என்சிசி அதிகாரி லொலிடா ஜூட் ஒருங்கிணைத்தார். யோகா மாஸ்டர் முத்தையா கலந்து கொண்டு யோகா மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து விளக்கிமாணவிகளுக்கு அடிப்படை யோகாசனங்களைக் கற்றுக்கொடுத்தார். இதில், மாணவிகளுக்கு யோகா, மூச்சு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. விழாவில் நூறுக்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story