டிரினிடி மகளிர் கல்லூரியில் சர்வதேச யோகா தினம்

நாமக்கல் - டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் இன்று (21.6.24) மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. கல்லூரியின் செயல் இயக்குநர் அருணா செல்வராஜ் இந்நிகழ்வை துவக்கி வைத்தார். நாமக்கல் மாவட்ட யோகா அமைப்பின் துணைத் தலைவர் எம். இன்பவள்ளி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு யோகா செய்வதால் நம் உடல் நலம் மட்டுமன்றி மன நலமும் மேம்படுகிறது என்றார். 700-க்கும் மேற்பட்ட மாணவிகள் மிகவும் ஆர்வமுடன் பங்கு கொண்டனர்.

Tags

Next Story