சர்வதேச யோகா தினம் - 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

சர்வதேச யோகா தினம் - 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

சிவகங்கையில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் யோகாசனத்தில் ஈடுபட்டனர்.


சிவகங்கையில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் யோகாசனத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை அருகே பனங்காடி சாலையிலுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி வளாகத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா 2024 தின நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் மனோஜ்குமார் சர்மா தலைமை வகித்தார். மாவட்ட நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் பிரவீன்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். யோகா மாஸ்டர் பரமசிவம் குழுவினர் தலைமையில் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் யோகா ஆசனங்களை செய்து காட்டினர். இதனைத் தொடந்து யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

பின்னர் யோகாவில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளுக்கு நேருவேந்திரா சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நேரு யுவகேந்திராவின் தன்னார்வலர்கள் பிரகாஷ் மற்றும் நவீன் ஆகியோர் செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சிகள் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story