சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தின பேரணி - ஆட்சியர் துவக்கி வைப்பு

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நடந்த போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகபெருந்திட்ட வளாகத்தில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் போதைப்பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு, மாநகர துணை காவல் ஆணையர் கிரிஸ் அசோக் யாதவ், உதவி ஆணையர் (கலால்) ராம்குமார் ஆகியோர் இருந்தனர்.

Tags

Next Story