சர்வதேச போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி

ஊத்தங்கரை அடுத்த கல்லாவி அரசு மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணியை டிஎஸ்பி பார்த்திபன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

சர்வதேச போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி டிஎஸ்பி பார்த்திபன் கொடியசைத்து துவக்கி வைத்தார்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவி அரசு மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச போதை பொருள் விழிப்புணர்வு பேரணி பள்ளி வளாகத்தில் ஊத்தங்கரை டி எஸ் பி பார்த்திபன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் முனைவர் செ.பற்குணன் அவர்கள் தலைமையில் முன்னதாக இறை வணக்க கூட்டத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றப்பட்டது

இதனைத் தொடர்ந்து பேரணி காமராஜர் சிலை வழியாக பேருந்து நிலையம் வரை மாணவ மாணவிகள் போதை விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்திய வண்ணம் விழிப்புணர்வு முழக்கமிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நடராஜ், மகளிர் பள்ளி தலைமை ஆசிரியர் அமுதா, பொருளாளர் ஆறுமுகம்,உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியாக தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் J.செந்தில்குமார் நன்றி உரை வழங்கினார்.

Tags

Next Story