கே எஸ் ஆர் கல்லூரியில் சர்வதேச யோகா தினம்

கே எஸ் ஆர் கல்லூரியில் சர்வதேச யோகா தினம்

கே எஸ் ஆர் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.


கே எஸ் ஆர் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

கே.எஸ்.ஆர் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் நாட்டுநலப்பணித் திட்டம்(NSS) மற்றும் தேசிய மாணவர் படை(NCC) சார்பாக 21.06.2024 அன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் முனைவர் மா.கார்த்திகேயன் கலந்து கொண்டு யோகா தினம் கொண்டாட்டப்படுவதற்கான நோக்கத்தினையும் மனிதனின் அன்றாட வாழ்வில் நடைபெறும் மன அழுத்தங்களை யோகா மூலம் எவ்வாறு குறைப்பது போன்ற தகவல்களை எடுத்துரைத்தார்.

சிறப்பு விருந்தினராக திருச்செங்கோடு யோகா ஆசிரியர் எம். கார்த்திகேயன் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பல்வேறு யோகாப் பயிற்சிகளை கற்றுக் கொடுத்தார். இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாணவிகள் ஆர்வத்தோடு இப்பயிற்சிகளை செய்ததோடு மட்டுமன்றியோகாவின் மகத்துவத்தையும் உணர்ந்து கொண்டதாகத் தெரிவித்தனர். இதில் கல்லூரியின் துணை முதல்வர், இயக்குநர்கள், பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story