சர்வதேச யோகா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

சர்வதேச யோகா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

கதிரேசன் மலை மீது சர்வதேச யோகா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கதிரேசன் மலை மீது சர்வதேச யோகா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சொர்ணமலைக் கதிரேசன் கோயில் மலை மீது சர்வதேச யோகா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சர்வதேச 10வது யோகா தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் மேனாள் என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் ரெ. சுப்பா ராஜு கோவில்பட்டி கதிர்வேல் முருகன் கோவில் கதிரேசன் மலை மீது யோகாசன விழிப்புணர்வு பயிற்சி நிகழ்த்தினார்.

இதில் ஓய்வு பெற்ற ஆசிரியர் கோ. சுரேஷ்குமாரும் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், "உலக நாடுகளுக்கு யோகா பயிற்சியை எடுத்துச் செல்ல உதவிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் ‎என்றார். காஷ்மீரில் பாரத பிரதமரும் தனுஷ்கோடியில் பாதுகாப்புத் துறை அமைச்சரும் யோகா பயிற்சியில் கலந்து கொள்வதோடு உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி இன்று செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story