அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சர்வதேச யோகா தின விழா

ஊத்தங்கரை ,அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சர்வதேச யோகா தின விழா நடைபெற்றது.

ஊத்தங்கரை ,அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சர்வதேச யோகா தின விழா நடைபெற்றது கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சர்வதேச யோகா தின விழா இன்று நடைபெற்றது. கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கல்லூரி பொறுப்பு முதல்வர் விஜயன் நிகழ்ச்சியை துவக்கி வைத்து தலைமையேற்றார்.

மெக்கட்ரானிக்ஸ் துறைத்தலைவர் மணிகண்டன் வரவேற்றார் .சிறப்பு விருந்தினர்களாக யோகா பயிற்றுனர் கிருஷ்ணமூர்த்தி ,யோகா ஆசிரியர்கள் தனசேகரன் ,தீனதயாளன்,சரளா, செஞ்சிலுவை சங்க தலைவர் மருத்துவர் தேவராசு ,ஹோட்டல் சங்க தலைவர் ராஜா ,நேசம் தொண்டு நிறுவனம் அறங்காவலர் குணசேகரன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு யோகாவின் சிறப்புகள் ,கண் பயிற்சி, கால் பயிற்சி, உடற்பயிற்சி பற்றிய செய்முறை விளக்கங்களை வழங்கினர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் தியாகராஜன் ஏற்பாடு செய்தார்.அனைத்து துறை தலைவர்கள், கல்லூரி விரிவுரையாளர்கள், மாணவர்கள், பள்ளி குழந்தைகள் கலந்துகொண்டனர். வேதியியல் விரிவுரையாளர் லோகேஷ்குமார் நன்றி கூறினார்.

Tags

Next Story