ராமநாதபுரத்தில் சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்

ராமநாதபுரத்தில் சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்

யோகா தினம் கொண்டாட்டம் 

ராமநாதபுரம் அமிர்த வித்யாலயம் பள்ளியில் சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

ராமநாதபுரம் அமிர்த வித்யாலயம் பள்ளியில் இன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அப்பள்ளியின் மாணவ மாணவியர்கள் பல்வேறு விதமான யோக முறைகளை பிரம்மாண்டமாக நிகழ்த்திக் காட்டினர்.

இந்நிகழ்வானது பள்ளியின் மேலாளர் பிரம்மச்சாரிணி லட்சுமி அம்மா அவர்கள் முன்னிலையில் பள்ளி முதல்வர் திருமதி கோகிலா மற்றும் பள்ளி துணை முதல்வர் திரு பாலவேல் முருகன் ஆகியோரின் சிறப்பான திட்டமிடலின்படி இனிதே நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அரசு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் பயிற்சியாளரான எம். சுரேஷ் அவர்கள் மாணவர்கள் முன்னிலையில்,

யோகக்கலையின் பல்வேறு பயன்கள் மற்றும் இன்றியமையாமை குறித்து சிறப்பு உரையாற்றினார். இதுபோன்ற உடல்-மனம் மேம்பாடு சார்ந்த கலாச்சாரக் கல்வியில் இப்பள்ளியானது தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதாகவும் சிறப்பு விருந்தினர் குறிப்பிட்டுள்ளார்.

Tags

Next Story