விருதுநகர் மாவட்டத்தில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்

சர்வதேச யோகா தின கொண்டாட்டம்

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பள்ளி மாணவ மாணவியர்கள் ஆர்வமாக கலந்து கொண்டு பல்வேறு யோகா ஆசனங்களை செய்து அசத்தினர்.

சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான யோகா தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் மாணவ மாணவிகள் யோகா ஆசிரியர்கள் மூலமாக யோகா சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக விருதுநகர் மற்றும் சிவகாசியில் உள்ள தனியார் பள்ளியில் யோகா தினத்தை முன்னிட்டு யோகா ஆசிரியர்கள் மூலமாக மாணவ மாணவிகளுக்கு சிறப்பு யோகா பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.

சிறப்பு யோகா பயிற்சி வகுப்பில் பங்கேற்ற மாணவ மாணவிகள் ஆர்வமாக பல்வேறு வகையான யோகாசனங்களை செய்த அசத்தினர். பயிற்சி வகுப்பில் விருதுநகர் மற்றும் சிவகாசி பகுதியில் தலா 500 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story