நீதிமன்ற வளாகத்தில் சர்வதேச யோகாசன தின நிகழ்ச்சி

நாமக்கல் நீதிமன்ற வளாகத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகாசன விழிப்புணர்வு பயிற்சி நடந்தன.

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின் பெயரில் நாமக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவர்/ மாவட்ட முதன்மை நீதிபதி ஆர்.குருமூர்த்தி வழிகாட்டுதல்படி, நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சர்வதேச யோகா தினம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவர்/ மாவட்ட முதன்மை நீதிபதி ஆர்.குருமூர்த்தி தலைமையில், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலாளர்/முதன்மை சார்பு நீதிபதி செயலாளர் சி.விஜய கார்த்திக் ஏற்பாட்டில் , யோகாசன பயிற்சிகள் நடைபெற்றன. சூர்ய நமஸ்காரம் உள்ளிட்ட பல்வேறு யோகாசன பயிற்சிகளில் அனைவரும் ஈடுபட்டனர்.

வழக்கறிஞரும் யோகாசன பயிற்சி ராஜேந்திரன் யோகாசன பயிற்சிகளை வழங்கினார்.மாவட்டக் கூடுதல் நீதிபதி எஸ்.பிரபா சந்திரன், மகளிர் நீதிமன்ற நீதிபதி முனுசாமி, குடும்ப நல நீதிபதி எம்.பாலகுமார், மாவட்டத்தின் பிற நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story