காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் பேட்டி!

காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் பேட்டி!

கார்த்திக் சிதம்பரம் 

காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், ''இந்தியாவில் இரண்டு சட்டம் உண்டு. அதில் பிஜேபி கூட இருந்தால் ஒரு சட்டம், பிஜேபி கூட இல்லாட்டி ஒரு சட்டம். பிஜேபி கூட இருந்தால் உங்களுக்கு இ டி ரைடு வராது, பிஜேபிக்கு எதிராக இருந்தால் உங்களுக்கு இடி ரெய்டு வரும். பிஜேபி கூட கூட்டணி வைத்திருந்தால் நீங்கள் கேட்கும் சின்னம் கிடைக்கும். பிஜேபிக்கு எதிரணியில் இருந்தால் கேட்கும் சின்னம் கிடைக்காது. இந்தியாவில் பொதுவான சட்டம் இல்லாமல் பிஜேபிக்கு ஆதரவாக ஒரு சட்டம் பிஜேபிக்கு எதிராக ஒரு சட்டம் இரண்டு சட்டங்கள் இந்தியாவில் அமல்படுத்தப்படுகிறது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதற்கு என்னை பொறுத்தவரையில் பிஜேபியை தோற்கடிப்பது முழு மூச்சாகும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் 40 தொகுதிகளிலும் திராவிட முன்னேற்ற கழகம் தலைமையில் கூட்டணி வகிக்கும் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெறும்.'' என தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story