ரவுடி கும்பல் மிரட்டல்

ரவுடி கும்பல் மிரட்டல்

ஓய்வு பெற்ற அதிகாரி குடும்பத்திற்கு ரவுடி கும்பல் மிரட்டல் விடுத்ததை அடுத்து எஸ் பி யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


ஓய்வு பெற்ற அதிகாரி குடும்பத்திற்கு ரவுடி கும்பல் மிரட்டல் விடுத்ததை அடுத்து எஸ் பி யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நியூ குமரி காலனியை சேர்ந்தவர் முருகேசன் (79) திருவரந்தபுரத்தில் பி எஸ் என் எல் அலுவலக உதவி இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நேற்று தனது மகன் மற்றும் குடும்பத்தினருடன் வந்து குமரி எஸ் பி அலுவலகத்தில் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- எனக்கும் எனது மகனுக்கும் உரிமையான வீடுகளை வாடகைக்கு கொடுத்துள்ளோம். இந்த நிலையில் வாடகை பிரச்சினை தொடர்பாக எனக்கு ரவுடி கும்பல்களிடம் இருந்து மிரட்டல்கள் வருகின்றன. எனது குடும்பத்தை கொன்று விடுவதாக நேரடியாக வந்து மிரட்டி விட்டு செல்கிறார்கள். கடந்த 14 -4 - 2004 அன்று மதியம் வீட்டிற்கு செல்லும்போது முன்பின் அறிமுகம் இல்லாத நபர்கள் எனது காம்பவுண்டுக்குள் நுழைந்து, என்னையும் எனது குடும்பத்தாரையும் கொன்று விடுவது போல் மிரட்டும் வகையில் அவர்களுடைய நடவடிக்கை இருந்தது.

இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் செய்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. மீண்டும் 14 - 4 - 2024 அன்று மீண்டும் சிலர் எனது வீட்டிற்கு வந்து தகராறு செய்து என்னை தாக்கினார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக முருகேசன் குடும்பத்தார் கூறுகையில், - வடசேரி போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் வடசேரி போலீஸ் நிலையம் முன்பு தர்ணா போராட்டம் நடத்த அனுமதி கேட்டு உள்ளோம். எங்களுக்கு அனுமதி தரவில்லை என்றாலும் அடுத்த வாரம் தர்ணா போராட்டம் நடத்துவோம் என்றனர்.

Tags

Next Story