பெட்ரோல் பங்க் ஊழியருக்கு மிரட்டல் - இருவர் அதிரடி கைது

பெட்ரோல் பங்க் ஊழியருக்கு மிரட்டல் - இருவர் அதிரடி கைது

பைல் படம் 

மானூரில் பெட்ரோல் பங்க் ஊழியரை அரிவாளை காட்டி மிரட்டிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் மானூர் தனியார் பெட்ரோல் பங்கில் கதிரேசன் என்பவர் வேலை செய்து வருகின்றார். இந்த பெட்ரோல் பங்கில் நேற்று மானுரை சேர்ந்த பெருமாள், காமாட்சி இருவரும் பாட்டிலில் பெட்ரோல் வாங்கிக்கொண்டு பணம் கொடுக்காமல் அரிவாள் காட்டி கதிரேசனை மிரட்டியுள்ளனர். இதுகுறித்து கதிரேசன் மானுர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து பெருமாள்,காமாட்சி இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

Tags

Next Story