போதையில் தம்பியை கொலை செய்த அண்ணன் - வேலூரில் பரபரப்பு

போதையில் தம்பியை கொலை செய்த அண்ணன் - வேலூரில் பரபரப்பு

காவல்துறை விசாரணை


வேலூர் அருகே தம்பியை அண்ணனே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் அடுத்த அப்துல்லாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் பெயிண்டர் வேலை செய்யும் அண்ணன் செல்வகுமார் (47), தம்பி இளவரசன் (35). இருவரும் திருமணம் ஆகாதவர்கள். நேற்று இரவு (18.03.2024) மது அருந்து கொண்டிருக்கும்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இளவரசன் வீட்டிற்கு சென்று உறங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அவர் மீது தின்னர் ( பெயிண்ட் அடிக்க பயன்படுத்தப்படும் ரசாயனம்) ஊற்றி செல்வகுமார் தீ வைத்து எரித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த இளவரசனை வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உறவினர்கள் இருப்பினும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். இது குறித்து புகாரின் பேரில் விரிஞ்சிபுரம் போலீசார் செல்வகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story