தூத்துக்குடியில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரம் அறிமுகம்

தூத்துக்குடியில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரம் அறிமுகம்

தானியங்கி இயந்திரம் திறந்து வைத்த ஆட்சியர்

தூத்துக்குடியில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரத்தினை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நிறுவப்பட்டுள்ள மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரத்தினை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தொடங்கி வைத்தார்.

பொதுமக்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கி தெரிவித்ததாவது, தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் துறையால் அறிமுகப்படுத்தப்பட்ட மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரத்தினை இன்று தொடங்கி வைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

இதன் மூலம் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் நெகிழி பைகளின் பயன்பாடு குறையும். மேலும் பொதுமக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் துணிப்பை உபயோகிப்பதை ஊக்குவிப்பதாக அமையும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், துணை ஆட்சியர் (பயிற்சி) பிரபு, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஹேமந்த்ஜோசன், உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் ரங்கசாமி, உதவி பொறியாளர்கள் முரளி கண்ணன், பிரதீப் பாண்டியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story