ஊத்தங்கரையில் பாஜக வேட்பாளர் அறிமுக கூட்டம்

ஊத்தங்கரையில் பாஜக வேட்பாளர் அறிமுக கூட்டம்

பாஜக வேட்பாளர் அறிமுக கூட்டம்

ஊத்தங்கரையில் பாஜக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

ஊத்தங்கரையில் பாஜக வேட்பாளர் அறிமுக கூட்டம். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் கிருஷ்ணகிரி மக்களவை பாஜக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் மக்களவை தேர்தல் வருகிற ஏப்ரல் 19 ம் தேதி நடைபெறவுள்ளது. பாஜக வேட்பாளராக சி.நரசிம்மன் நியமிக்கப்பட்டார்.

அறிமுக கூட்டத்திற்க்கு மாவட்டத் தலைவர் சிவப்பிரகாஷ் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் சங்கர், மாவட்டச் செயலாளர் சரவணன், பாமக மாவட்ட செயலாளர் ராஜசேகரன், சமூக நீதிப் பேரவை மாநில துணைத்தலைவர் மூர்த்தி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். முன்னதாக சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ராஜேந்திரன் மக்களவை வேட்பாளர் சி.நரசிம்மனை அறிமுகம் செய்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.

இதில் பாரத பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்க்கு என்னற்ற திட்டங்களை வழங்கியுள்ளார்.11 மருத்துவ கல்லூரிகளை தந்தவர் பாரத பிரதமர், மீண்டும் மோடி வேண்டும் மோடி என கோசமிட்டனர். மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என பாஜக கூட்டணி கட்சியினரிடையே ஆதரவு கோரினார். இதில் தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் செல்வராஜ், ஜெய்சங்கர்,ஓபிஎஸ் அணி தொகுதி செயலாளர் செல்வராஜ், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் கணேஷ் குமார், சிவக்குமார்,

நகர செயலாளர் சுரேஷ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.இறுதியாக ஒன்றிய தலைவர் சிங்காரவேலன் நன்றி கூறினார்.

Tags

Read MoreRead Less
Next Story