காஞ்சியில் பா.ஜ.க சார்பில் வேட்பாளர் ஏ.அஷ்வத்தாமன் அறிமுக கூட்டம்

புதுப்பாளையம் அடுத்த காஞ்சி கூட்ரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் ஏ. அஷ்வத்தாமன் அறிமுகக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் காஞ்சி காரப்பட்டு கூட்ரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தேசிய ஜனநாயக கூட்டணியின் திருவண்ணாமலை நாடாளுமன்ற வேட்பாளர் ஏ. அஷ்வத்தாமன் அறிமுக கூட்டம் நடைபெற்றது பாரதி ஜனதா கட்சியில் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணிய மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது பா.ஜ.க மாவட்டத் துணைச் செயலாளர் ரமேஷ் மற்றும் மாவட்ட துணை தலைவர் கவிதாபிரதீஸ் மற்றும் பா.ம.க மாவட்ட தலைவர் பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை லோக்சபா வேட்பாளர் ஏ.அஷ்வத்தாமன் பங்கேற்று சிறப்புரையாற்றினார் அப்போது வேட்பாளர் ஏ.அஷ்வத்தாமன் பேசுகையில் ; திருவண்ணாமலை லோக்சபா தேர்தலில் திமுக இரண்டாவது இடத்திற்கும் அதிமுக மூன்றாவது இடத்திற்கும் போட்டி போடுகிறது முதலிடத்தில் தாமரை தான் வரப்போகிறது மக்கள் முடிவு செய்துவிட்டனர். என்றும் திமுக ஆட்சியில் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவும் நான் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்றதும் முதலில் போதையில் இருந்து இளைஞர்களை விளையாட்டு பக்கமும் ராணுவத்தின் பக்கமும் திருப்புவது தான் எங்களுடைய நோக்கம். இந்த பாராளுமன்ற தொகுதி மக்களை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதும் பழங்குடி மக்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதும் எங்களுடைய நோக்கம். இந்த தேர்தலில் பணநாயகத்தை நம்பாமல் ஜனநாயகத்தை நம்பி வாக்காளர்கள் வாக்களிப்பார்கள் என்றும் திருவண்ணாமலைக்கு விமான நிலையம் கொண்டு வர வழிவகை செய்வேன் என்றும் பல்வேறு தொழிற்சாலைகளை கொண்டு வந்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பேன். என்றும் தமிழகத்தில் திராவிட கட்சிகளை வீழ்த்த கடுமையாக பா.ஜ.க நிர்வாகிகளாகிய நீங்கள் உழைக்க வேண்டும் என்றும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கட்சிக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்றும் இவ்வாறு பாஜக வேட்பாளர் ஏ. அஷ்வத்தாமன் கூறினார் மேலும் இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் ஒன்றிய தலைவர்கள் குமார் , ரமேஷ் , ஐயப்பன் , செல்வராசன் , அமுதா , வெங்கடேசன் ,மற்றும் ஒன்றிய பொதுச் செயலாளர் கருணாகரன் உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் மற்றும் மூத்த முன்னோடிகளும் பொதுமக்களும் இளைஞர்களும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் , தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர் இறுதியாக பா.ஜ.க மாவட்ட செயலாளர் பாலாஜி நன்றி உரையாற்றினார் பட விளக்கம் ; புதுப்பாளையம் அடுத்த காஞ்சி கூட்ரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் திருவண்ணாமலை லோக்சபா வேட்பாளர் ஏ. அஷ்வத்தாமன் அறிமுக கூட்டம் நடைபெற்றது பா.ஜ.க மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் பா.ம.க மாவட்ட செயலாளர் பாண்டியன் , பா.ஜ.க மாவட்ட துணை செயலாளர் ரமேஷ் பா.ம.க மாவட்ட தலைவர் பரமசிவம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளும் பா.ஜ.க , பா.ம.க நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் பங்கேற்றனர்

Tags

Read MoreRead Less
Next Story