திருவையாறு ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆய்வு

திருவையாறு ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆய்வு

ஆட்சியர் ஆய்வு 

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஒன்றியத்தில் அரசு திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவையாறு ஒன்றியம், பூதலூர் வட்டம் செந்தலை கிராமத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் மருத்துவமனை பதிவேடுகள், மருந்துகள் இருப்பு மற்றும் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து நேரில் கேட்டறிந்து ஆய்வு செய்தார். பின்னர், கருப்பூர் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலகத்தின் பணிகளையும், அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு குறித்தும், கருப்பூர் அங்காடியில் உணவுப் பொருட்களின் இருப்பு குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், நடுக்காவேரியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், மருந்துகள் இருப்பு மற்றும் பணியாளர்களின் வருகைப் பதிவேடு ஆகியவற்றையும், புதிதாக கட்டடங்கள் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.பா.கலைவாணி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story