அக்னிவீரர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அழைப்பு

அக்னிவீரர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அழைப்பு

பைல் படம்

இந்திய இராணுவத்தில் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இந்திய ராணுவத்தில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு 2024-25ம் ஆண்டிற்கான அக்னிவீரர் சேர்க்கைக்கு திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்கள் 22.03.2024 வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு 22.04.2024 முதல் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஆட்சேர்ப்பு ஆண்டு 2024-25-க்கு, அக்னிவீரர்களின் ஆட்சேர்ப்பு இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படும்.

முதல் கட்டமாக ஆன்லைன் கணினி அடிப்படையிலான எழுத்துத்தேர்வு(CEE) நடைபெறும். இரண்டாம் கட்டமாக ஆட்சேர்ப்பு பேரணி(உடற்தகுதி தேர்வு) நடைபெறும். எனவே,www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story