சிவகங்கை அரசு மற்றும் தனியார் ஐடிஐயில் சேர விண்ணப்பிக்க அழைப்பு

சிவகங்கை அரசு மற்றும் தனியார் ஐடிஐயில் சேர விண்ணப்பிக்க அழைப்பு

தொழிற்பயிற்சி நிலையம் 

சிவகங்கை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் ஐடிஐயில் சேர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள தொழிற்பிரிவுகளுக்கு மாணவா்கள் சோ்க்கை நடைபெற்று வருகிறது. 12-ஆம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு படித்து தோ்ச்சி பெற்ற மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ள மாணவா்கள் வருகிற 7.6.2024 வரை www.skilltraining.tn.gov.in என்கிற இணையதள முகவரி வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு 04575-290625, 82200 08486 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்

Tags

Next Story