திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்க அழைப்பு 

திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்க அழைப்பு 
குமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மேயர் மகேஷ்
கோவையில் திமுக சார்பில்; நடக்கவுள்ள முப்பெரும் விழாவில் பங்கேற்க கட்சியினர் முன்வர வேண்டும் என நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேருமான மகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திமுக தலைவர் தமிழக முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவே வியக்கும் வகையில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த வெற்றியை தந்த தமிழ்நாடு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வருகிற 15 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 4 மணி அளவில் கோயம்புத்தூர் கொடிசியா மைதானத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையிலும் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள், வெற்றி பெற்ற 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளும் விழா, கலைஞர் பிறந்தநாள் நூற்றாண்டு நிறைவு விழா, தமிழ்நாடு முதலமைச்சருக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த முப்பெரும் நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திமுக மாநில, மாவட்ட, மாநகரம் மற்றும் அனைத்து பிரிவு நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story