புதுச்சேரி கவர்னருக்கு தேர் திருவிழாவில் கலந்து கொள்ள அழைப்பு

புதுச்சேரி கவர்னருக்கு தேர் திருவிழாவில் கலந்து கொள்ள அழைப்பு

ஆளுநருக்கு அழைப்பு

புதுச்சேரி கவர்னருக்கு தேர் திருவிழாவில் பங்கு பெறுமாறு பூரண கும்ப மரியாதையுடன் அழைப்பு விடுக்கப்பட்டது ‌.

வேலூர் மாவட்டம் காங்குப்பம் மகாதேவ மலையில் மகானந்த சித்தர் தலைமையில் சித்திரை தேர் திருவிழா ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சித்திரை தேர் திருவிழா (ஏப்ரல்) 14-ந் தேதி நடக்கிறது.

இதனையொட்டி மகாதேவமலை மகானந்த சித்தர் அருளாசியுடன் செய்யாறு கல்யாண முருகர் கோவில் ஸ்தாபகரும், மகா தேவமலை அறங்காவலர் குழு உறுப்பினரும், செய்யாறு நகர பா.ஜனதா தலைவருமான கே.வி.ஆர் என்ற கே.வி.வெங்கட்ராமன் புதுச்சேரி கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து தேர் திருவிழாவில் பங்கு பெறுமாறு பூரண கும்ப மரியாதையுடன் அழைப்பு விடுத்தார்.

Tags

Next Story