மெக்கானிக் மீது இரும்பு கம்பியால் தாக்குதல்

மெக்கானிக் மீது இரும்பு கம்பியால் தாக்குதல்

வழக்குபதிவு

கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் அருகே மெக்கானிக் மீது இரும்பு கம்பியால் தாக்குதல் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் அருகே உள்ள கண்டன் விளையை சேர்ந்தவர் ஞானசேகர் ( 59). இவர் அந்த பகுதியில் டிவி உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான இடம் கண்டன் விளையில் உள்ளது. அந்த இடத்தில் உள்ள பழைய கட்டிடத்தை இடித்த மண் குவியலை ஞானசேகர் அதே பகுதியில் குவித்து வைத்துள்ளார். இந்த மண்ணை அந்த பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் ஞானசேகரனிடம் கேட்டுள்ளார். ஞானசேகர் மண் தனக்கு தேவை உள்ளதாக கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் சம்பவ தினம் இரவு அவரது நண்பருடன் ஞானசேகர் கடைக்கு வந்து தகராறு செய்துள்ளார். அப்போது வாலிபர் கையில் வைத்திருந்த கம்பியால் ஞானசேகரை தாக்கி உள்ளார். இதில் படுகாயமடைந்த ஞானசேகரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகர்கோவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்த்தனர். இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story