தி.மலையில் வாக்கு எண்ணும் மையம் பகுதியில் டிரோன்கள் பறக்க தடை

தி.மலையில் வாக்கு எண்ணும் மையம் பகுதியில் டிரோன்கள் பறக்க தடை

மாவட்ட ஆட்சியர் 

திருவண்ணாமலையில் வாக்கு எண்ணும் மையம் பகுதியில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மற்றும் ஆரணி நாடாளுமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை வருகிற ஜூன் மாதம் 4- ந் தேதி நடைபெற உள்ள நிலையில்,

வாக்கு எண்ணிக்கை நடக்கும் மையங்கள் அமைந்துள்ள இடங்களை சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரம் எந்தவித டிரோன்களும் பறக்க விட தடை விதிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story