கடவுச்சீட்டில் முறைகேடு: வெளிநாடு செல்ல முயன்றவா் கைது

கடவுச்சீட்டில் முறைகேடு: வெளிநாடு செல்ல முயன்றவா் கைது

கடவுச்சீட்டில் முறைகேடு

கடவுச்சீட்டில் முறைகேடு செய்து வெளிநாடு செல்ல முயன்ற திருத்துறைப்பூண்டியைச் சோ்ந்த நபரை திருச்சி விமான நிலைய போலீஸாா் கைது செய்தனா்.
திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டியைச் சோ்ந்தவா் சின்னப்பன் (52). தொழிலாளியான இவா் மலேசியா செல்வதற்காக திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை வந்தாா். அவரது கடவுச்சீட்டு உள்ளிட்ட பயண ஆவணங்களை குடியேற்றப்பிரிவு போலீஸாா் சோதனை மேற்கொண்டதில், அவரது பிறந்த தேதியை மாற்றி கடவுச்சீட்டில் பதிந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து குடியேற்றப் பிரிவு அதிகாரி நவீன்குமாா் அளித்த புகாரின்பேரில் திருச்சி விமான நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து சின்னப்பனை கைது செய்தனா்.

Tags

Next Story