இருளர் குடும்பங்களுக்கு தொகுப்பு வீடு வழங்கணும்!

இருளர் குடும்பங்களுக்கு தொகுப்பு வீடு வழங்கணும்!

செய்யூர் அருகே இடைக்கழிநாட்டில் வசிக்கும் இருளர் குடும்பங்களுக்கு தொகுப்பு வீடு வழங்க வேண்டும் என பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

செய்யூர் அருகே இடைக்கழிநாட்டில் வசிக்கும் இருளர் குடும்பங்களுக்கு தொகுப்பு வீடு வழங்க வேண்டும் என பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சி, 10வது வார்டுக்கு உட்பட்ட சேம்புலிபுரம் கிராமத்தில் உள்ள பச்சைவாழியம்மன் கோவில் அருகே, 35 ஆண்டுகளாக இருளர் மக்கள் வசித்து வருகின்றனர். மரம் வெட்டுதல், தேங்காய் பறித்தல், கீற்று பின்னுதல் போன்ற கூலி வேலைக்குச் சென்று, தங்கள் அன்றாட வாழ்கையை நடத்தி வருகின்றனர். இங்கு, தற்போது 29 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களில், 16 குடும்பத்தினருக்கு மட்டும், 2007ம் ஆண்டு தனியார் தொண்டு நிறுவனம் மூலம், பட்டா வழங்கி வீடுகள் கட்டி தரப்பட்டன. அந்த வீடுகள் தற்போது, மிகவும் சிதிலமடைந்து காணப்படுகின்றன.

மழை காலங்களில் வீட்டில்தண்ணீர் ஒழுகும் நிலையில் உள்ளது. மேலும், 13 குடும்பத்தினருக்கு வீடு இல்லாததால், ஒரே வீட்டில் இரண்டு குடும்பங்களாகவும், குடிசைகள் அமைத்தும் வசித்து வருகின்றனர். ஒரே வீட்டில் இரண்டு குடும்பங்கள் வசிப்பதால், இடநெருக்கடியால் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, இப்பகுதியில் வசிக்கும் 29 குடும்பத்தினருக்கும் புதிய தொகுப்பு வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags

Next Story