மரம் வளர்க்கும் இடமா... சுகாதார வளாக கட்டடமா?

மரம் வளர்க்கும் இடமா... சுகாதார வளாக கட்டடமா?

 புரிசை ஊராட்சி அலுவலகம் அருகே ஆண்கள் சுகாதார வளாக கட்டடம் சுற்றி முட்புதர்கள் காடுபோல் வளர்ந்துள்ளன. 

புரிசை ஊராட்சி அலுவலகம் அருகே ஆண்கள் சுகாதார வளாக கட்டடம் சுற்றி முட்புதர்கள் காடுபோல் வளர்ந்துள்ளன.
காஞ்சிபுரம் அடுத்த, புரிசை ஊராட்சி அலுவலக கட்டடம் அருகே, ஆண்கள் சுகாதார வளாக கட்டடம் உள்ளது. இங்கு, 4 லட்சம் ரூபாய் செலவில், தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறை கட்டடம் கட்டப்பட்டு உள்ளது. இந்த கட்டடம், பொது மக்களின் பயன்பாட்டிற்கு முழுமையாக வராததால், சுகாதார வளாக கட்டடம் வீணாகி வருகிறது. மேலும், கட்டடத்தின் சுவரில் ஆலமரச் செடிகள் வளர்ந்துள்ளன. இதனால், கட்டடம் விரிசல் ஏற்பட்டு, சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, புரிசை ஆண்கள் சுகாதார வளாக கட்டடத்தை, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகம் சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story