வீட்டுமனை அனுமதியில் குளறுபடியா?டி.ஆர்.ஒ. ஆய்வு

வீட்டுமனை அனுமதியில் குளறுபடியா?டி.ஆர்.ஒ. ஆய்வு

ஆய்வு செய்த அதிகாரிகள்

குமாரபாளையம் அருகே வீட்டுமனை அனுமதியில் குளறுபடியா? என டி.ஆர்.ஒ. ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சிக்குட்பட்ட நல்லாம்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் வீட்டுமனைகள் அமைக்கப்பட்டன. அரசு சார்பில் பெறவேண்டிய அனுமதிகள் பெற்றதாக கூறப்படுகிறது.

ஆனால் ஒரு தரப்பினர் அனுமதியை முறைகேடாக பெற்றுள்ளதாக தெரிவிக்கின்றனர். இது சம்பந்தமாக இட உரிமையாளர்களும் உரிய ஆவணங்களை சமர்பித்தும் உள்ளதாக தெரிகிறது. சில நாட்கள் முன்பு இங்கு போலீஸ் பாதுகாப்புடன் குழாய் அமைக்கும் பணியும் நடந்தது.

இதற்கும் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மாவட்ட நிர்வாகத்தில் புகார் கொடுத்து, நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் என, போலீசார் கூறினர். நேற்று டி.ஆர்.ஒ. சுமன், ஆர்.டி.ஒ. சுகந்தி உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். இதன் ஆய்வறிக்கை மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பிக்கப்படும் என ஆய்வுக்குழுவினர் தெரிவித்து சென்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story