சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடனுதவி காசோலை வழங்கல்

சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடனுதவி காசோலை வழங்கல்

காசோலை வழங்கல் 

கடலூர், திருப்பாதிரிப்புலியூர் தனியார் பள்ளி அரங்கில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு வழங்கி தொடங்கி வைத்ததை தொடர்ந்து கடலூர், திருப்பாதிரிப்புலியூர் தனியார் பள்ளி அரங்கில் நடைபெற்ற விழாவில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடனுதவிக்கான காசோலையை வழங்கினார். உடன் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண் தம்புராஜ், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன், விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.இராதாகிருஷ்ணன், மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, மாநகராட்சி துணைமேயர் பா.தாமரைச்செல்வன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளனர்.

Tags

Next Story