பட்டா மாறுதல் ஆணை வழங்கல்

பட்டா மாறுதல் ஆணை வழங்கல்

பட்டா மாறுதல்

சாலியமங்கலம் சரக கிராமங்களுக்கு ஜமாபந்தி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணை வழங்கினார்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அலுவலகத்தில் சாலியமங்கலம் சரக கிராமங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் சுதா ராணி தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து 91 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டு உடனே நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார் முகாமில் பட்டா மாறுதல் ஆணை ஒருவருக்கும் நத்தம் சிட்டா ஒருவருக்கும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பாபநாசம் வட்டாட்சியர் மணிகண்டன் வட்ட வழங்க அலுவலர் அருணகிரி சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் முருககுமார் துணை வட்டாட்சியர் தமயந்தி வட்ட சார் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி வருவாய் ஆய்வாளர் கமலி கிராம நிர்வாக அலுவலர்கள் நீலகண்டன் பவுல் ஆரோக்கியராஜ் ராஜேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.நம்ம


Tags

Next Story