பி.டி.ஓ., அலுவலகத்தில் வீட்டு மனை பட்டா வழங்கல்

பி.டி.ஓ., அலுவலகத்தில் வீட்டு மனை பட்டா வழங்கல்

சின்னசேலம் பி.டி.ஓ., அலுவலகத்தில் 94 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.


சின்னசேலம் பி.டி.ஓ., அலுவலகத்தில் 94 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

சின்னசேலம் பி.டி.ஓ., அலுவலகத்தில் 94 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. சின்னசேலம் பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். தலைமையிடத்து துணை தாசில்தார் தனலட்சுமி முன்னிலை வகித்தார். வருவாய் ஆய்வாளர் செந்தில் வரவேற்றார்.

நிகழ்ச்சியில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நுாற்றாண்டு விழாவையொட்டி, தோட்டப்பாடி, குரால், கூகையூர், வீரபயங்கரம், பாக்கம்பாடி, ஈரியூர் உள்ளிட்ட கிராமங்களில் கிராம நத்தம் மற்றும் தரிசு போன்ற இடங்களில் பல ஆண்டுகளாக வசித்த 94 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், ஊராட்சி தலைவர்கள் இளவரசி ரமேஷ், சிவஞானம், சிவசக்தி, வருவாய் உதவியாளர் வெங்கடேசன், தி.மு.க., மாவட்ட பிரதிநிதி பெரியசாமி, வி.ஏ.ஓ.,க்கள் நாகராஜ், ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story