கராத்தே மாணவர்களுக்கு தகுதி சான்று வழங்கல்

கராத்தே மாணவர்களுக்கு  தகுதி சான்று வழங்கல்

தகுதி சான்று வழங்கல் 

குமாரபாளையம் கியோ குசின் கராத்தே பயிற்சி மையம்  சார்பில் பயிற்சி பெற்ற மாணவ ,மாணவியர்களுக்கு தகுதி சான்றிதழ்கள் மற்றும் பட்டைகள் வழங்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கியோ குசின் கராத்தே பயிற்சி மையம், உடையார் பேட்டை கிளை சார்பில் பயிற்சி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு தகுதி போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பட்டைகள் வழங்கப்பட்டது. இதில் மஞ்சள் பட்டை 2 நபர்களுக்கும், நீல நிற பட்டை 6 நபர்களுக்கும் வழங்கப்பட்டது. அக்னி சிறகுகள் சீனிவாசன், சி.பி.ஐ. நகர செயலர் கணேஷ்குமார், தி.மு.க. கிளை செயலர் ஆறுமுகம், கராத்தே பயிற்சியாளர் எகானந்தம் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story