28 உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கல்

28 உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கல்

சிவகங்கையில் கூட்டுறவுத்துறையில் 28 உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது

சிவகங்கையில் கூட்டுறவுத்துறையில் 28 உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது

சிவகங்கை மாவட்ட கூட்டுறவு துறையில் 28 உதவியாளர் பணிக்கு, எழுத்து, நேர்காணல் மூலம் நியமித்துள்ளதாக, கூட்டுறவு இணைபதிவாளர் கே.ஜினு தெரிவித்தார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: தமிழக கூட்டுறவு துறைகளில் காலியாக உள்ள 2,257 உதவியாளர், இளநிலை உதவியாளர் பதவிக்கு, டிச., 24ல் எழுத்து தேர்வும், அதை தொடர்ந்து நேர்காணலும் நடத்தப்பட்டன.

நேர்காணல் மூலம் தேர்வான அனைவருக்கும் உதவியாளர், இளநிலை உதவியாளர் பதவிக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. சிவகங்கை மாவட்ட கூட்டுறவு துறையில் 28 உதவியாளர் பணியிடங்கள் மட்டுமே காலியாக இருந்தன. இதற்காக நடந்த எழுத்து தேர்வில் 61 பேர் தேர்ச்சி பெற்று, நேர்காணலுக்கு தேர்வாகினர். நேர்காணலுக்கு பின் இறுதியாக 28 பேர் உதவியாளர் பணிக்கு தேர்வாகினர். இவர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்

Tags

Next Story